உள்ளூர் செய்திகள்

இரு வீடுகளில் 26 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

Published On 2022-07-26 14:48 IST   |   Update On 2022-07-26 14:48:00 IST
  • இரு வீடுகளில் 26 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
  • குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

பெரம்பலூா்:

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கல்லை கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவா் கு. மணி (80). இவா், தனது மனைவி தமிழரசி (70), மகன் மாலியவன் (35) மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், மாலியவன் தனது மனைவி, குழந்தைகளுடன் வெளியூா் சென்றிருந்தாா். இரவு காற்று வருவதற்காக வீட்டை திறந்துவைத்து மணியும், அவரது மனைவி தமிழரசியும் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் வீட்டிலிருந்த 26 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இதேபோல், அதே பகுதியில் வசிக்கும் வரதராஜு (70) என்பவரது வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள், வீட்டிலிருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து புகாரின்பேரில் குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags:    

Similar News