உள்ளூர் செய்திகள்
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
- கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- வகுப்புகளுக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களாக 28 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 24 பேர் நேற்று காலை கல்லூரியில் வகுப்புகளுக்கு செல்லாமல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், அரசாணை எண் 246, 247 மற்றும் 248 ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் காலை முதல் வகுப்பறைக்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே ஒரே இடத்தில் அமர்ந்து பணி புறக்கணிப்பு செய்தனர்.