உள்ளூர் செய்திகள்

பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-10-03 08:44 GMT   |   Update On 2022-10-03 08:44 GMT
  • பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மதனகோபாலபுரம் ஆரோக்கியா நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சக்தி பிரசாத் (வயது 25). பட்டதாரியான இவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அவரிடம், அவரது பெற்றோர் அவ்வவ்போது சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் சக்தி பிரசாத் தூங்கினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் மணி எழுந்து வந்து பார்த்த போது மகன் சக்தி பிரசாத்தை காணவில்லை. இதனால் அவர் அருகே உள்ள இடங்களுக்கு மகனை சென்று தேடியுள்ளார். அப்போது வீட்டின் அருகே மணிக்கு சொந்தமான மாவு மில்லில் சக்தி பிரசாத் சேலையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் குடும்பத்தினர் உதவியுடன் சக்தி பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சக்தி பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News