உள்ளூர் செய்திகள்

இலவச கணினி கணக்கியல் பயிற்சி

Published On 2023-08-31 11:44 IST   |   Update On 2023-08-31 11:44:00 IST
  • பெரம்பலூரில் இலவச கணினி கணக்கியல் பயிற்சி நடைபெற உள்ளது
  • பயிற்சியில் பங்குபெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது

பெரம்பலூர்,

பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவசமாககணினி கணக்கியல் பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மைய இயக்குநர் ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சிமையத்தில் கணினி கணக்கியல் பயிற்சி இலவ2ாக இளைஞர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. மேலும் எம்எஸ் ஆபிஸ்பேக்கேஜ், டேலி ஆகியவையும் கற்றுத்தரப்படும். 19 வயதுக்கு மேலும், 45 வயதுக்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்த வேண்டும்.

பயிற்சியின் காலஅளவு 30 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் அலுவலகத்தில் தகுந்த ஆவணங்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

ஆகியவற்றுடன் வரும் 6ம்தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விபரங்களுக்கு 04328 - 277896, 9488840328 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News