உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது-கலெக்டர் கற்பகம் அறிவிப்பு

Published On 2023-04-27 11:28 IST   |   Update On 2023-04-27 11:28:00 IST
  • பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் நடைபெறவுள்ளது
  • விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்

பெரம்பலூர:

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது. எனவே விவசாயிகள் அன்றைய தினம் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News