உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2022-06-17 14:46 IST   |   Update On 2022-06-17 14:46:00 IST
  • ஜெயபால்பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக கம்பி எடுத்து அடித்துள்ளார்.
  • அப்போது கம்பி எதிர்பாராதவிதமாக அருகே இருந்த மின்சார கம்பியில் பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55), விவசாயி.

இவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக கம்பி எடுத்து அடித்துள்ளார். அப்போது கம்பி எதிர்பாராதவிதமாக அருகே இருந்த மின்சார கம்பியில் பட்டது.

இதில் மின்சாரம் பாய்ந்து ஜெயபால் சுருண்டு விழுந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயபால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News