உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-06-13 12:13 IST   |   Update On 2023-06-13 12:13:00 IST
  • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
  • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன்(வயது 45). விவசாயி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கொளக்காநத்தம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் கண்ணையன் நேற்று காலை இறந்து கிடந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கண்ணையன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News