உள்ளூர் செய்திகள்

சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட விவசாயி கைது

Published On 2022-10-17 10:13 GMT   |   Update On 2022-10-17 10:13 GMT
  • போலீசார் நேற்று ரோந்து சென்றனர்
  • சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, வெள்ளுவாடி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் நாட்டு சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட தோட்டத்து உரிமையாளர் தங்கவேலை (வயது 51) போலீசார் கைது செய்தனர்.

2 லிட்டர் நாட்டு சாராயத்தையும், 150 லிட்டர் நாட்டு சாராய ஊறலையும் போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Tags:    

Similar News