உள்ளூர் செய்திகள்

மின்வாரிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-06 13:56 IST   |   Update On 2022-09-06 13:56:00 IST
  • மின்வாரிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • அகவிலைப்படியை உயர்த்தி தரக்கோரி

பெரம்பலூர்:

அகவிலைப்படியை உயர்த்தி தரக்கோரி பெரம்பலூரில் மின்வாரிய கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவும் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின்வாரிய அலுவலர்கள் அகவிலைப்படியை உயர்த்தி தர வேண்டும் என்று மின்வாரியத்தையும், அரசையும் வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News