உள்ளூர் செய்திகள்
- நோய் அவதியால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 70). இவரது மனைவி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு தீராத நீரிழிவு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த கோவிந்தன் வீட்டில் தனியாக இருக்கும் போது பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார். இதையடுத்து உறவினர்கள் கோவிந்தனை துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.