உள்ளூர் செய்திகள்

கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-07-16 15:13 IST   |   Update On 2022-07-16 15:13:00 IST
  • கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
  • சப்-இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரிசைப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் தலைமை தாங்கினார். இதில் பள்ளி முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினராக குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். மருதையான் கோவிலில் தொடங்கிய இந்த ஊர்வலம் மேலமாத்தூர் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது. இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News