உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-28 15:10 IST   |   Update On 2022-06-28 15:10:00 IST
  • காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய கோரி நடந்தது

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய மீனவர் காங்கிரசின் துணைத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய கோரி மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News