உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி துணைதலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-25 15:41 IST   |   Update On 2022-07-25 15:41:00 IST
  • பேரூராட்சி துணைதலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில் துணைதலைவராக இருப்பவர்செல்வலட்சுமி. தி.மு.க. சார்பில் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், பேரூர் கழக தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் துணைதலைவர் செல்வலட்சுமி, தான் வெற்றிபெற்ற ஏழாவது வார்டுக்குட்பட்ட அரசடிக்காடு பகுதியில் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பேரூராட்சியில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களுக்கும் உள்ளாட்சி பணிகளை நிறைவேற்றுவதில் துணைத்தலைவர்செ ல்வ லெட்சுமி ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டிக்கும் விதமாக அனைத்து வார்டு உறுப்பினர்கள், ஏழாவது வார்டு பொதுமக்களுடன் சென்று செல்வலட்சுமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News