உள்ளூர் செய்திகள்

மின்னல் தாக்கி கம்ப்யூட்டர்கள் கருகியது

Published On 2023-02-04 12:11 IST   |   Update On 2023-02-04 12:11:00 IST
  • மின்சார வயர்கள் நாசம்
  • பல லட்சம் சேதம்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மாவட்டத்தில் பல பகுதிகளில் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.மேலும் குறிப்பாக ஆலத்தூர் தாலுகாவில் உள்ள இரூர், பாடாலூர், செட்டிகுளம், காரை, கொளக்காநத்தம், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மாலை 3 மணி அளவில் ஆலத்தூர் யூனியன் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் மின்னல் தாக்கியது அதில் அந்த அறையில் உள்ள மின்சார வயர்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் அனைத்தும் மின்னல் தாக்கி பழுதடைந்தது.பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News