உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் துறைமங்கலத்தில் சி.ஐ.டி.யூ. பேரவை கூட்டம்

Published On 2023-03-06 12:15 IST   |   Update On 2023-03-06 12:15:00 IST
  • பெரம்பலூர் துறைமங்கலத்தில் சி.ஐ.டி.யூ. பேரவை கூட்டம் நடைபெற்றது
  • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூரில் சி.ஐ.டி.யூ. இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது.பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த பேரவை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் டெய்சி, மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் அகில இந்திய மாநாடு மற்றும் மாநில, மாவட்ட குழு முடிவுகளை விளக்கி பேசினர்.சிஐடியூ, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10 மற்றும் 11ம்தேதிகளில் மாவட்ட முழுவதும் கிராமபுற மக்களை சந்திக்கும் வகையில் பிரச்சார நடைபயணத்தை நடத்துவது,

சர்வதேச பெண்கள் தினத்தை யொட்டி வரும் 15ம்தேதி தெருமுனை கருத்தரங்கினை நடத்துவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கிடவும், பொதுத்துறை நிறுவன ங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20ம்தேதி முதல் 30ம்தேதி வரை நடைபயண பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் மணிமேகலை, ரெங்கராஜ், சிவானந்தம், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Tags:    

Similar News