உள்ளூர் செய்திகள்

குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்

Published On 2022-08-11 09:35 GMT   |   Update On 2022-08-11 09:35 GMT
  • குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
  • சமூக அக்கறையுடன் கையாள வேண்டும்.

பெரம்பலூர்:

பெரம்பலூரில் பாலக்கரையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம், யுனிசெப் மற்றும் தோழமை தன்னார்வலத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பெரம்பலூர் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அப்பணியை சமூக அக்கறையுடன் கையாண்டு பொதுமக்களிடம் விரைந்து செல்வதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் சீரார் நிதி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட சட்ட ஆலோசனைகளும், குழந்தைகளின் கருத்துகளுக்கு மதிப்பளிப்தோடு ஊடகங்களில் குழந்தைகள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (மாநில வள மையம்) பூரணி, மூத்த பத்திரிகையாளர் ராமசுப்ரமணியன் (எ) மணி, தோழமை தொண்டு நிறுவன இயக்குநர் தேவநேயன், வழக்கறிஞர் சுப. தென்பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மகாகிருஷ்ணன், பெருமாள், தோழமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ரோவர் கல்லூரியில் பயிலும் ஊடகவியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News