உள்ளூர் செய்திகள்

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

Published On 2023-03-20 08:34 GMT   |   Update On 2023-03-20 08:34 GMT
  • வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பெரம்பலூர்,

பங்குனி மாத முதல் பிரதோஷத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில், சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Tags:    

Similar News