உள்ளூர் செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

Published On 2023-09-28 08:25 GMT   |   Update On 2023-09-28 08:25 GMT
  • பெரம்பலூர் போலீசார் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
  • தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதுமதி (டவுன்), சுப்பையன் (நெடுஞ்சாலை) தலைமையிலான போலீசார் வெவ்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவை அணிவதால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும் என்றும், சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்கினால் விபத்துகளை தவிர்த்து விடலாம், என்றனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமம் பெற்ற தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News