உள்ளூர் செய்திகள்

அகரம்சீகூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

Published On 2023-06-22 12:57 IST   |   Update On 2023-06-22 12:57:00 IST
  • அகரம்சீகூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கினர்
  • போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கருப்ட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பழனிவேல் (வயது 36) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று 2 இரு சக்கர வாகனத்தில் 3 நபர்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்துள்ளனர். அப்போது பணியில் இருந்த பழனிவேல் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே 3 நபர்களும் சேர்ந்து பழனிவேலை தாக்கியுள்ளனர்.அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரும் என்ன நடப்பது என்று தெரியாமலும், கேள்வி கேட்காமலும் பெட்ரோல் பங்க் ஊழியர் பழனிவேலை கொடூரமாக தாக்கி உள்ளனர்.

இதையடுத்து காயமடைந்த பழனிவேலை பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் இதுகுறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் மது போதையில் தாக்கிய 5 வாலிபர்களும் கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் வினோத் (30), பென்ஸ் மகன் சிவராஜ் (16), ராமதாஸ் மகன் அஜித் (23), ராசாங்கம் மகன் ஐயப்பன் என்ற பூவரசன் (27), திருவள்ளுவன் மகன் முத்துக்குமார் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News