உள்ளூர் செய்திகள்

சாலையில் விழுந்து பெரும் சத்தத்துடன் வெடித்த ஆசிட் குடுவை

Published On 2023-04-17 06:44 GMT   |   Update On 2023-04-17 06:44 GMT
  • சாலையில் ஓடிய ஆசிட்டில் இருந்து எழுந்த புகையால் பெண் மயக்கம்
  • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை தெளித்து நடவடிக்கை

பெரம்பலூர்,

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் ஆசீட் அடங்கிய பெரிய குடுவைகளுடன், ஒருவர் சென்று கொண்டிருந்தார். இதில் இருந்து ஒரு குடுவை கீழே விழுந்து உடைந்து உள்ளது. உடையும் பொழுது பெரும் சத்தத்தை ஏற்படுத்த உள்ளது. இதனால் அந்த வாகனத்திற்கு பின்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் இது பற்றி எதுவும் அறியாமல், ஆசிட் ஏற்றி சென்ற இருசக்கர வாகன ஓட்டி சென்று விட்டார். ஆசிட்' தண்ணீர் போல் சாலையில் ஓடியது. மேலும் கொளுத்திய வெயிலுக்கு 'ஆசிட்' பொறிந்து கொண்டிருந்தது. இதனால் மீண்டும் வெடிக்கலாம் என்று பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் கொட்டி கிடந்த 'ஆசிட்' மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சாலையை தூய்மைபடுத்தினர். 'ஆசிட்' வெடிக்கும் போது, அதனருகே யாரும் இல்லாததால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் 'ஆசிட்' கொண்டு சென்றது யார்? அவர் எதற்காக 'ஆசிட்' கொண்டு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News