உள்ளூர் செய்திகள்

விஜயதசமி பண்டிகை முன்னிட்டு மாரியம்மன் வீதி உலா

Published On 2022-10-06 08:54 GMT   |   Update On 2022-10-06 08:54 GMT
  • விஜயதசமி பண்டிகை முன்னிட்டு மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது
  • சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகா,கூத்தனூர் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு மாரியம்மன்,மருதையான் சாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.

ஆலத்தூர் தாலுகா, கூத்தனூர் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டி கையை முன்னிட்டு மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் . நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

விழாவில் முக்கிய சிறப்பு நிகழ்வான மாரியம்மன், மருதையான் சுவாமிகள் மாரியம்மன் கோவில் முன்பு வீதியுலா தொடங்கி பெரிய ஏரிக்கு வந்தடைந்தது. மாரியம்மன்,மருதையான் சுவாமிகள் ஆனது அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கூத்தனூர் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News