உள்ளூர் செய்திகள்

செஞ்சேரியில் சாராயம் காய்ச்சியவர் கைது

Published On 2023-08-06 11:02 IST   |   Update On 2023-08-06 11:02:00 IST
  • பெரம்பலூர் செஞ்சேரியில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
  • சாராய ஊறல்கள் அங்கேயே கொட்டி அழிப்பு

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மாட்டு கொட்டகையில் சாராய ஊறல் போட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் பெரம்பலூர் எஸ்.ஐ. சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு 250 லிட்டர் அளவுள்ள சாராய ஊறல் போடப்பட்டிருந்ததும், அதனை செஞ்சேரி மேற்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் விஜய்(30) என்பவர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார்சாராய ஊறலை அங்கேயே கொட்டி அழித்து விட்டனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து சாராயம் காய்ச்சிய விஜயை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News