உள்ளூர் செய்திகள்
திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது
- திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது செய்யபட்டார்
- நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஆசாமியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் மங்களமேடு அடுத்துள்ள எறையூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.