உள்ளூர் செய்திகள்

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2023-01-30 12:29 IST   |   Update On 2023-01-30 12:29:00 IST
  • வெங்காயம், தக்காளி, மரவள்ளி பயிருக்கு காப்பீடு
  • நிதி உதவி, நிலையான வருமான் கிடைக்க ஏதுவாக

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், தக்காளி, மரவள்ளி ஆகிய பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, புதுப்பிக்கப்பட்ட பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2022-23 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலைப்பயிர்களான சின்ன வெங்காயம், மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடு செய்திடும் வகையில் விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும் நிலையான வருமானம் கிடைக்க ஏதுவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.சின்ன வெங்காயம் பயிருக்கு குறுவட்டங்களான கொளக்காநத்தம், செட்டிக்குளம், பெரம்பலூர், குரும்பலூர், வெங்கலம் மற்றும் வாலிகண்டபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மரவள்ளி பயிருக்கு வேப்பந்தட்டை, வெங்கலம் மற்றும் பசும்பலூர் குறுவட்டங்களும், தக்காளி பயிருக்கு கூத்தூர் குறுவட்டமும் தேர்வு செய்து வரப்பெற்றுள்ளன.சின்ன வெங்காயத்திற்கு ஏக்கருக்கு காப்பீடு தொகை 41 ஆயிரத்து 500. இதில் விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரிமிய தொகை ரூ. 2 ஆயிரத்து 75 ஆகும். தக்காளி ஏக்கருக்கு காப்பீடு தொகை ரூ.17 ஆயிரத்து 50. இதில் விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரிமியதொகை ரூ. 853 ஆகும். இந்த தொகையை நாளை (31ம்தேதிக்குள்) செலுத்தவேண்டும். மரவள்ளி ஏக்கருக்கு காப்பீடு தொகை ரூ. 24 ஆயிரத்து100. இதில் விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரிமிய தொகை ரூ. ஆயித்து 205 ஆகும். இந்த தொகையை வரும் பிப்.28ம்தேதிக்குள் செலுத்தவேண்டும்.இத்திட்டத்தில் பயன்பெற நடப்பு ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் சிட்டா, நடப்பு பருவ அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் முதலியவற்றை கொண்டு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பிரீமியத் தொகையைசெலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News