உள்ளூர் செய்திகள்

வனஉயிரினங்களை வேட்டையாடிய 3 பேர் கைது

Published On 2022-07-27 10:07 GMT   |   Update On 2022-07-27 10:07 GMT
  • வனஉயிரினங்களை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • வனக்காவலர்கள் குழுவினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் சித்தளி வனக்காப்புக்காடு பகுதிக்கு அருகே சிலர் வன உயிரின வேட்ைடயில் ஈடுபட்டு வருவதாக பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், பெரம்பலூர் வனச்சரகர் பழனிகுமரன் தலைமையில், வனவர் குமார், வனகாப்பாளர்கள் ரோஜா, அன்பரசு, வனக்காவலர் சவுந்தர்யா ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி வன உயிரின வேட்ைடயில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், வன உயிரின வேட்ைடயில்ஈடுபட்ட 3 பேரும் குன்னம் தாலுகா ஒகளுரைச்சேர்ந்த ராமசாமி (22), சாமிநாதன் (60), ராமலிங்கம் (70) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பேரிடமும் இருந்து வேட்டையாடப்பட்ட வன உயிரினங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து 3 பேர் மீதும் வன உயிரின காப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிவு, 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News