உள்ளூர் செய்திகள்

வியாபாரிகள் 2 பேர் கைது

Published On 2023-07-15 11:59 IST   |   Update On 2023-07-15 11:59:00 IST
  • வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • புகையிலை பொருட்கள் விற்ற

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் மங்களமேடு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சக்கரபாணி (53), சங்கர் (51) ஆகியோர் தங்கள் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மூட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சக்கரபாணியிடம் இருந்து சுமார் ரூ.12,990 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், சங்கரிடம் இருந்து சுமார் ரூ.6,600 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News