உள்ளூர் செய்திகள்

1928 மாணவர்களுக்கு ரூ.1.27 கோடி கல்வி உதவித்தொகை

Published On 2022-07-20 14:29 IST   |   Update On 2022-07-20 14:29:00 IST
  • 1928 மாணவர்களுக்கு ரூ.1.27 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
  • பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் உதவிவழங்கினார்

பெரம்பலூர்:

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித் தொகை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சியடைந்த ஆயிரத்து 928 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 27 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டது.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் 2022 கடந்த மார்ச் மாதம் உதவித் தொகை க்கான தேர்வு பெரம்பலூர் , அரியலூர் ,கடலூர், விழுப்புரம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 392 பள்ளிகளிலிருந்து 28 ஆயிரத்து 431 மாணவ,மாணவிகள் தேர்வெழுதினர்.

இந்த தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 234 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 618 மாணவர்களும், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 757 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் 241 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரியில் 53 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் உடற் கல்வியியல் கல்லூரியில் 25 மாணவர்களும் என மொத்தம் ஆயிரத்து 928 மாணவ,மாணவிகள் கல்வி பயிலசேர்ந்துள்ளனர்.

கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, உடற்கல்வியியல் , பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரமும் என மொத்தம் ஆயிரத்து 928 மாணவ,மாணவிகளுக்கு ஒரு கோடியே 26 லட்சத்து 92 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் கல்விநிறுவன முதல்வர்கள் இளங்கோவன், உமாதேவிபொங்கியா, வெற்றிவேலன், சுகுமார், சாந்தகுமாரி, பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News