உள்ளூர் செய்திகள்

மழைக்கால மின் தடையை சரிசெய்ய 12 சிறப்பு குழுக்கள்

Published On 2022-08-06 09:56 GMT   |   Update On 2022-08-06 09:56 GMT
  • மழைக்கால மின் தடையை சரிசெய்ய 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
  • மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தகவல்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா வெளியிட்டுள்ள ஓர் செய்திக்குறிப்பில்தெரிவித்திருப்பதாவது:

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில்கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளதால், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை மற்றும் மின்பாதையில் ஏற்பட்டுள்ள குறைகளை உடனுக்குடன் சரி செய்ய செயற் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் 12 சிறப்பு பணியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது .

மேலும் மின்கம்பங்கள் மற்றும் தளவாட பொருட்கள் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் மழையின்போது மின் உபகரணங்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

மின்கம்பிகள் அறுந்து கிடப்பது தெரியவந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் மேலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மின் தடை மற்றும் அவசர புகார்களுக்கு 9498794987 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News