உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற உள்ளது.
- கூட்டம் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் யு.டி.ஐ.டி. அட்டை நகலுடன் அளித்து பயன் பெறுமாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.