உள்ளூர் செய்திகள்

மின்விளக்குகள் அமைத்த முத்துநகர் மக்கள்.

சொந்த செலவில் மின்விளக்குகள் அமைத்த மக்கள்

Published On 2022-10-20 16:10 IST   |   Update On 2022-10-20 16:10:00 IST
  • முத்து நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
  • இரவு நேரங்களில் பாம்பு, நாய்கள் தொல்லையால் மக்கள் அவதியடைந்தனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே முத்துநகரில் வசிக்கும் நகர் வாசிகள் தங்களது சொந்தசெலவிலேயே தெருவிளக்குகளை அமைத்து புதன்கிழமை பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தனர்.

சீர்காழி நகராட்சி 1-வது வார்டில் முத்துநகர் அமைந்துள்ளது.

இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு நகராட்சி சார்பில் மின்விளக்குகள் அமைத்து தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தும் மின்விளக்கு அமைத்திட தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனால் இரவு நேரங்களில் செல்லும்போது பாம்பு போன்ற விஷ ஜந்துக்களாலும், நாய்கள் தொல்லையாலும் மக்கள் அவதியடைந்தனர்.

இதனையடுத்து முத்துநகர் சங்க நிர்வாகிகள் ஏற்பாட்டின்படி நகர் வாசிகள் இணைந்து ரூ.25ஆயிரம் செலவில் அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் 8 மின்விளக்குகளை பொருத்தினர்.

அதனை பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி முத்து நகர் சங்க தலைவர் அமுதராஜன் தலைமையில் நடந்தது. சங்க செயலாலரும், நகர்மன்ற உறுப்பினருமான முபாரக் அலி மின்விளக்கை ஒளிரசெய்து தொடங்கி வைத்தார்.

இதில் பொருளாளர் சுரேஷ், துணை தலைவர் பிச்சைசாலி முகம்மது, துணை செயாளர் இஸ்மாயில் ஜின்னா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News