உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமாக உள்ள சாலையை படத்தில் காணலாம்.

குஜிலியம்பாறை அருகே போக்குவரத்துக்கு பயன்படாத உருக்குலைந்த சாலையால் பொதுமக்கள் தவிப்பு

Published On 2023-08-14 05:37 GMT   |   Update On 2023-08-14 05:37 GMT
  • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த சாலை அதன் பின்னர் பராமரிக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி ன்றனர்.
  • இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல முறை புகார் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சி க்குட்பட்ட தாசமநாய க்கன்பட்டி, வைரபெருமாள் பிள்ளையூர், மணல்காட்டூர் ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. சின்னழகுநாயக்க னூர் அருகே மணல் காட்டூர் - தாசமநாயக்கன்பட்டி செல்லும் சாலை சுமார் 1 கி.மீ தொலைவுக்கு உருக்குலைந்து போக்கு வரத்துக்கு பயன்பாடற்ற நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த சாலை அதன் பின்னர் பராமரிக்கப்படவில்லை. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி ன்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல முறை புகார் அளிக்க ப்பட்டது. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மணல்காட்டூர், வைரபெருமாள் பிள்ளை யூர், தாசமநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு எந்த வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்த ப்படவில்லை. எனவே விரைவில் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும். உரிய நட வடிக்கை எடுக்காதபட்ச த்தில் பொதுமக்களுடன் சேர்ந்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை முற்றுகையிடுவோம் என அவர்கள் தெரி வித்தனர்.

Tags:    

Similar News