உள்ளூர் செய்திகள்

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்.

கோடியக்கரை கடற்கரையில் மீன் வாங்க குவிந்த மக்கள்

Published On 2023-01-16 08:12 GMT   |   Update On 2023-01-16 08:12 GMT
  • கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
  • கோடியக்கரை மீனவர்கள், பாம்பன், காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் கடற்கரையில் குவிந்தனர்.

இதனால் வழக்கத்திற்கு மாறாக மீன் விலை இரு மடங்காக உயர்ந்தது.

இருப்பினும் இன்று அசைவம் சமைத்து உண்ண வேண்டும் என்பதால் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலாமீன், ஷீலாமீன், திருக்கைமீன், வாலைமீன், வாவல் மீன், நண்டு, இறால் உள்ளிட்டைவைகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

பொதுமக்கள் தேவை அறிந்து கோடியக்கரை மீனவர்கள் பாம்பன் மற்றும் காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

Tags:    

Similar News