உள்ளூர் செய்திகள்

காயம் அடைந்த வடமாநில வாலிபர்.


திண்டுக்கல் அருகே திருடன் என நினைத்து வடமாநில வாலிபரை தாக்கிய மக்கள்

Published On 2022-07-18 08:17 GMT   |   Update On 2022-07-18 08:17 GMT
  • திண்டுக்கல் அருகே திருடன் என நினைத்து வடமாநில வாலிபரை பொதுமக்கள் தாக்கினர்
  • வடமாநில வாலிபர், திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கினர்

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல்-நத்தம் சாலையில் குடகனாறு இல்லம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் சுற்றி வந்தார். அவர் மயக்க நிலையில் சாப்பிடுவதற்கு ஓட்டல் ஏதேனும் உள்ளதா? என அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவரது மொழி தெரியாததால் அங்கு கஞ்சா போதையில் இருந்த 2 வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்களும் விசாரித்தபோது பூட்டி இருந்த வீடுகளை நோட்டமிட்டு திருடவந்ததாக கஞ்சா ஆசாமிகள் தெரிவி த்தனர். இதனையடுத்து ஹிந்தி தெரிந்த ஒருவர் விசாரித்தார். அப்போது தான் போர்வெல் லாரியில் வேலை பார்த்து வருவதாகவும், வேலை முடித்து அனைவரும் சென்று விட்டுதன்னை பாதியிலேயே இறக்கி விட்டு சென்றதாகவும் கூறினார்.

இதனால் ஓட்டல் எங்கு உள்ளது என தெரியாமல் பசியில் இருந்ததாகவும், தான்கேட்டதை தவறாக புரிந்து கொண்டுவிட்டனர் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் மற்றொரு வாகனத்தின் மூலம் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News