உள்ளூர் செய்திகள்

பராமரிப்பு பணிகளுக்காக பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் 18-ந்தேதி மூடல்

Published On 2022-12-16 08:42 GMT   |   Update On 2022-12-16 08:42 GMT
  • பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெற உள்ளது.
  • பராமரிப்பு பணிகளுக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.

தென்காசி:

நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட்டில் மேம்பால பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அங்குள்ள ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் அன்று ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.

எனவே வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை தென்காசி செய்தி மக்கள் தொ டர்பு அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்ப ட்டுள்ளது.

Tags:    

Similar News