உள்ளூர் செய்திகள்

சி.பி.போஸ்.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை தஞ்சையோடு இணைக்க கூடாது- சி.பி. போஸ்

Published On 2022-10-02 10:02 GMT   |   Update On 2022-10-02 10:02 GMT
  • மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 55118 ஆகும்.
  • நிர்வாக காரணங்களை காட்டி தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மதுக்கூர்: -

சிவசேனா மாநில துணைத்தலைவரும் காவி புலிப்படை நிறுவனத்தலைவரும் தமிழக இந்து பரிவார் மாநில அமைப்பாளருமான புலவஞ்சி சி.பி. போஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிரு ப்பதாவது:-

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டமானது பட்டுக்கோட்டை நகராட்சி, ஒன்றியம், அதிரை நகராட்சி, மதுக்கூர் பேரூர்-ஒன்றியம் பேராவூரணி பேரூர்-ஒன்றியம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. 56 மேநிலைப்பள்ளிகளும் 52 உயர்நிலைப் பள்ளிக ளில் படிக்கின்ற மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 55118 ஆகும்.பணியாற்றும் ஆசிரியர்களும் ஊழியர்களின் எண்ணிக்கை 2207.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை தஞ்சையோடு இணைக்க கூடாது- சி.பி. போஸ்நிர்வாக காரணங்களை காட்டி தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தோடு இணைப்பதை ஏற்று கொள்ள முடியாது. பாரம்ப ரியமான பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தை பட்டுக்கோட்டையிலேயே செயல்பட வேண்டும். தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தோடு இணைக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News