உள்ளூர் செய்திகள்

மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடை பெற்ற போது எடுத்த படம்.


தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published On 2022-09-03 08:42 GMT   |   Update On 2022-09-03 08:42 GMT
  • தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடை பெற்றது.
  • மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2,56,15,000-க்கு திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடை பெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் ருக்மணி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை த்தலைவர் உதயகிருஷ்ணன் உள்பட அனைத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அனைத்து வட்டாரங்க ளிலிருந்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். 115-வது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.2,85,83014-க்கும்மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2,56,15,000-க்கு திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News