உள்ளூர் செய்திகள்

தனசேகரன்

பண்ருட்டி போலீசார் அதிரடி: என்.எல்.சி. தொழிலாளியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது

Published On 2022-07-29 06:45 GMT   |   Update On 2022-07-29 06:45 GMT
  • பண்ருட்டி போலீசார் என்.எல்.சி. தொழிலாளியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியவரை கைது செய்தனர்.
  • நாளொன்றுக்கு 18 ஆயிரம் வீதம் 45 நாட்களில் தவணை முறையில் 7,50,000- கொடுத்துள்ளார் செல்வழகன்.

கடலூர்:

பண்ருட்டி போலீஸ் உட்கோட்டம் முத்தாண்டிக் குப்பம் காவல் எல்லைக் குட்பட்ட சின்ன ஒடப்பன் குப்பத்தை சேர்ந்தவர் செல்வழகன் (வயது 30) என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவர், அதேபகுதியை சேர்ந்த பந்தல் அமைப்பாளர் தனசேகரன் (33). என்பவரி டம் தனது குடும்ப செலவுக் காக ரூ 3,00,000 கடனாக பெற்றிருந்தார். இந்ததொகையை பெறுவதற்காக பூர்த்தி செய்யப் படாத 10ஆவணங்களை கொடுத்திருந்ததார். இந்தகடன் தொகைக்கு நாளொன்றுக்கு 18 ஆயிரம் வீதம் 45 நாட்களில் தவனை முறையில் 7,50,000 கொடுத்துள்ளார் செல்வழகன். தனசேகரன் தன்னிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டு–வதாக முத்தாண்டிக் குப்பம் போலீசில் செல்வழ கன்புகார் கொடுத்தார். கடலூர் எஸ்.பி. பண்ருட்டி டி.எஸ்.பி. ஆகியோர் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் முத்தாண்டி குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ராமலிங்கம் என்பவரிடமும் தனசேகரன் கந்து வட்டி கேட்டு மிரட்டி யுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனசேகரனை கைது செய்து அவரிடமிருந்து செல்வழகன் கொடுத்த ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் தனசேகரனை பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News