உள்ளூர் செய்திகள்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி விழாவுக்கான கொடியேற்றம் நடந்தது.

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்

Published On 2023-03-11 09:52 GMT   |   Update On 2023-03-11 09:52 GMT
  • 22-ந்தேதி தங்க கருட வாகனத்தில் இரட்டை குடை சேவையும் நடக்கிறது.
  • விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி உற்சவம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜ கோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெரிய கொடி மரத்தில் கருட பகவான் உருவம் பொறித்த கொடியை வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் ஏற்றினர். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ராஜகோபால–சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் டி.மனோகரன், கோவில் நிர்வாக அதிகாரி மாதவன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வருகிற 20-ந் தேதி தங்க சூரிய பிரபை விழாவும், 22-ந்தேதி தங்க கருட வாகனத்தில் இரட்டை குடை சேவையும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி உற்சவம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. அன்று காலை நவநீத சேபையில் ராஜகோபாலன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இரவில் தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் சாமி காட்சி தருகிறார். தொடர்ந்து வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News