உள்ளூர் செய்திகள்

பாண்ரங்கர், ருக்குமணி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

பாண்டுரங்கர், ருக்குமணி திருக்கல்யாணம்

Published On 2023-07-05 14:50 IST   |   Update On 2023-07-05 14:50:00 IST
  • காலை சிறப்பு பூஜைகளுடன், கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றன.
  • ஓசூர் ஹரிதாச ரத்னா ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி பாகவதரின் சிறப்பு பஜனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகில் உள்ள அக்ரஹாரம் சிவாஜிநகரில் அமைந்துள்ள பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் 87வது பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி இன்று (புதன்கிழமை) 5-ந்தேதி வரை நடக்கிறது.

கடந்த 29-ந் தேதி காலை சிறப்பு பூஜைகளுடன், கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றன.

தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று வந்தன. நேற்று காலை சிறப்பு பூஜை, யாகம் நடத்தப்பட்டு பாண்டுரங்கர், ருக்மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றன.

இதைடுத்து ஓசூர் ஹரிதாச ரத்னா ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி பாகவதரின் சிறப்பு பஜனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மஹா தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்திகள் கிருஷ்ணகிரி நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இன்று காலை 10.30 மணிக்கு மஹா மங்களார்த்தி நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபாண்டுரங்க ருக்மணி பக்த மண்டலி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News