உள்ளூர் செய்திகள்

பஞ்சப்பட்டி ஊராட்சி மன்றஅலுவல கட்டிடம் திறப்பு

Published On 2023-10-24 06:29 GMT   |   Update On 2023-10-24 06:29 GMT
  • கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற அலுவல கட்டிடம் திறப்பு
  • குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார்

குளித்தலை, 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரூ.23.57 லட்சத்தில் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை, குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் திறந்து வைத்தார்.

விழாவில் பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி சத்தியமூர்த்தி தலைமை வகித்தார், தொடர்ந்து விழாவில், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கரிகாலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், தி.மு.க. மாணவரணி செயலாளர் கோபிநாத், ஒன்றிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சிவா, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பத்மா பொன்ன ம்பலம், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், வைகைநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பெரியசாமி, மற்றும் பஞ்சப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் ராஜ்குமார், பழனி யம்மாள், ஜெயலலிதா, கவிதா, செல்வகுமார், காளி தேவி, சேகர், அம்சவல்லி மற்றும் ஊராட்சி செயலா ளர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News