உள்ளூர் செய்திகள்

ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவ,மாணவிகள்.




செங்கோட்டை நூலகத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்த ஓவிய போட்டி

Published On 2022-07-22 07:42 GMT   |   Update On 2022-07-22 07:42 GMT
  • ஓவிய ஆசிரியர் முருகையா மற்றும் ஜெய்சிங் நடுவராக இருந்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தார்கள்.
  • 12 பள்ளிகளில் இருந்து 116 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை நூலகத்தில் வைத்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதன் ஒலிம்பியாட் சின்னம் வரையும் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் 12 பள்ளிகளில் இருந்து 116 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பரிசளிப்பு விழாவில் வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் செண்பக குற்றாலம் வரவேற்புரை ஆற்றினார். இலஞ்சி டேனியல் கல்லூரி நூலகர் ஏஞ்சலின் வாழ்த்துரை வழங்கினார்.

ஓவிய ஆசிரியர் முருகையா மற்றும் ஜெய்சிங் நடுவராக இருந்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தார்கள். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செங்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் சின்னத்துரை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நூலகர் ராமசாமி நன்றி கூறினார் விழா ஏற்பாடுகளை விஜி முத்துமாரி மற்றும் கார்த்திக் செய்திருந்தனர்.

Tags:    

Similar News