உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் பெயிண்டருக்கு 20 இடங்களில் அரிவாள்வெட்டு

Published On 2023-07-05 08:09 GMT   |   Update On 2023-07-05 08:09 GMT
  • மகேஷ் குமார் நேற்று இரவு இந்திராநகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே வரும்போது, அவரை வழிமறித்த 6 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
  • படுகாயமடைந்த மகேஷ் குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் மகேஷ் குமார்(வயது 37). பெயிண்டர். இவர் நேற்று இரவு இந்திராநகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே வரும்போது, அவரை வழிமறித்த தூத்துக்குடி புதுக்கோட்டை ராஜூவ்நகரை சேர்ந்த பாலா என்ற பாலமுருகன், மாரி உள்ளிட்ட 6 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் உடலில் 20 இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மகேஷ் குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் இதில் மகேஷ் குமாருக்கும் பாலா( என்ற) பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது, இந்நிலையில் மகேஷ் குமாரை வெட்டி கொல்ல முயன்ற பாலா( என்ற) பாலமுருகன் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News