உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் பெயிண்டர் தற்கொலை
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள குமுதே பள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது29). பெயிண்டர். இவருடைய மனைவி குணவதி (24).
இந்த நிலையில் மாதேஷ்க்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாதேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.