உள்ளூர் செய்திகள்

குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற துர்காலட்சுமியை காரைக்கால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காரைக்கால் அருகே பயங்கரம் பால் கேட்டு அழுத பச்சிளம்குழந்தையை கொன்ற தாய் கைது

Published On 2023-02-01 07:13 GMT   |   Update On 2023-02-01 07:13 GMT
  • கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
  • பாலுக்கு அழுத தனது 4 மாத குழந்தையை, கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அக்க ரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவருக்கும், நல்லாத்தூர் மேலப்படுகை கிராமத்தை சேர்ந்த துர்காலட்சுமிக்கும் (வயது 35) 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரசவ த்துக்காக துர்காலட்சுமி தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அங்கு துர்காலட்சுமியில் தாய் தமிழரசி (65), தந்தை பரமசிவம் (75), சகோதரர்கள் ஆண்டவர் (40), நடராஜன் (38), பாட்டி வேதவல்லி (85) ஆகியோர் உள்ளனர்.   இந்நிலையில் கடந்த 26ந் தேதி அதிகாலை, பாலுக்கு அழுத தனது 4 மாத குழந்தையை, கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, தூங்கி கொண்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் தாய், தந்தை, பாட்டி மற்றும் சகோதர்கள் 2 பேர் என 5 பேரை, மண்வெட்டியால் வெட்டிவிட்டு வீட்டின் உள்ளே சென்று சமையல றையில் இருந்த கத்தியை எடுத்து, தன்னைத்தானே கழுத்தில் அறுத்துகொண்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இரத்தவெள்ளத்தில் நடராஜன் பக்கத்து வீட்டு கதவை தட்டி சப்தம் போட்டு நடந்த சம்பவத்தை கூறி உதவிகேட்டுள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அனைவரை யும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் வேதவல்லி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்         இது குறித்து நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார் துர்க்கா லட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்தாய்பால் அதிகம் சுரக்காத காரணத்தால், பால் கொடுக்க முடியாமல் தவியாய் தவித்து வந்தேன். குழந்தை சதா அழுந்துகொண்டே இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் யாரும் இதற்கு உதவவில்லை. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு குழந்தை, மற்றவர்களை கொலை செய்ய முயன்றேன். என வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொ டர்ந்து, துர்க்காலட்சுமியை கைது செய்த போலீசார் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News