உள்ளூர் செய்திகள்

ஊட்டி புத்தகத் திருவிழா-நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

Published On 2023-03-20 09:48 GMT   |   Update On 2023-03-20 09:48 GMT
  • புத்தகத் திருவிழா மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது
  • பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பழமை வாய்ந்த புத்தகங்களும் இங்கு அமைக்கப்பட்டு இருந்தன.

ஊட்டி,

ஊட்டியில் முதல் முறையாக நடைபெற்ற புத்தகத் திருவிழா பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது. கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவை ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பழமை வாய்ந்த புத்தகங்களும் இங்கு அமைக்கப்பட்டு இருந்தன. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற நிகழ்சியில், சுற்றுலாதுறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புத்தக திருவிழாவிற்க்கு சிறப்பான பங்களிப்பு வழங்கியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் அதிக நன்கொடை வழங்கிய ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News