திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஒருநாள் பயிற்சி பட்டறை
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
- பளு தூக்குதலின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் பற்றிய கருத்துக்களை சிறப்பு விருந்தினர் உடற்பயிற்சியாளர் கந்தசாமி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பளு தூக்கும் மன்றம் மற்றும் ரத்த தான கழகம் இணைந்து நடத்திய 'பளு தூக்குதல் பயிற்சி பட்டறை' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பளு தூக்கும் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயவேல் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். பளு தூக்குதலின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் பற்றிய கருத்துக்களை சிறப்பு விருந்தினர் உடற்பயிற்சியாளர் கந்தசாமி மாணவர்களிடம் கலந்துரையாடினார். கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் பளுதூக்குதலின் நன்மைகள் மற்றும் அதனால் உடல் மற்றும் மனம் எவ்வாறு தகுதி அடைகிறது என்பதை பற்றிய விஷயங்களை மாணவர்களிடம் கலந்துரையாடினார். ரத்த தானம் செய்பவர்கள் மன்றத்தின் இயக்குனர் பேராசிரியர் மோதிலால் தினேஷ் மாணவர்களை வழி நடத்தினார். பல்வேறு துறைகளை சேர்ந்த திரளான மாண வர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் பளு தூக்கும் மன்றத்தின் இயக்குனர் பேராசிரியர் தாவீது ராஜா நன்றி கூறினார்.