உள்ளூர் செய்திகள்

கடலூரில் சாலையில் சுதந்திரமாக திரியும் மாடுகளை படத்தில் காணலாம்.

கடலூரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Published On 2022-07-18 07:40 GMT   |   Update On 2022-07-18 07:40 GMT
  • கடலூரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
  • சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் சிறப்புமிக்க கோவில்களும் மற்றும் தொழில் நிறுவனங் களுக்கு உகந்த தொழிற் சாலைகளும் அதிகமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் இங்கு அதிகமாக இருக்கும். இந்நி–லையில் இங்கு மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்ப–வர்கள் எண்ணிக்கை அதிக–மாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகமாக இருக்கும். 

தற்போது இந்த போக்கு–வரத்து நெரிசல் மட்டுமின்றி கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள சாலைகளிலும் தெருக்களிலும் ஆங்காங்கே சுற்றி தெரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாடுகள் சாலையின் குறுக்கே ஆங்காங்கே செல்வதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு மக்களின் நலனை பாதுகாக்க சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை அப்புறப்படுத்தி விபத்து ஏற்படாமல் தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News