உள்ளூர் செய்திகள்

பாலத்தின் தடுப்பு சுவரில்பைக் மோதி வாலிபர் சாவு

Published On 2023-04-22 15:36 IST   |   Update On 2023-04-22 15:36:00 IST
  • இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பால தடுப்பு சுவரின் மீது மோதினார்.
  • சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள திம்மராஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது21).

சம்பவத்தன்று இவர் காவேரிப்பட்டினம் அருகே உள்ள அன்னக்கொட்டாய் பகுதி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பால தடுப்பு சுவரின் மீது மோதினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காவேரிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News