உள்ளூர் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு திருமணம்
- எட்டு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
- ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
தருமபுரி,
தருமபுரியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எட்டு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, தருமபுரி உதவி ஆணையர் உதயகுமார், சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், அறங்காவலர் மாவட்ட குழு தலைவர் கவுதமன், உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யம், தம்பதிகளுக்கு புத்தாடை,
ரூ.50 ஆயிரம் மதிப்பில் பீரோ, கட்டில், மிக்சி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.