உள்ளூர் செய்திகள்

ஆம்னி கார்கள் மோதி 2 ேபர் படுகாயம்

Published On 2022-06-07 09:55 GMT   |   Update On 2022-06-07 09:55 GMT
குமாரபாளையத்தில் ஆம்னி கார்கள் மோதி 2 ேபர் படுகாயம் அடைந்தனர்.

குமாரபாளையம்:

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 48). மாவு மில் ெதாழில் நடத்தி வருகிறார். இவரது நண்பர் சதீஷ்குமாரின் தாயார் பார்வதிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவரை, சுந்தரம் தனது ஆம்னி காரில் கோவைக்கு அழைத்து ெசன்றார்.

பின்னர் சிகிச்சை முடிந்து ஆம்னி காரில் வீடு திரும்பினார்.சுந்தரம் கார் ஓட்ட, அருகில் உறவினர் இளங்கோ அமர்ந்திருந்தார். சேலம் -கோவை புறவழிச்சாலை கல்லூரி அருகே வந்த போது, பல்லக்காபாளையம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மற்றொரு ஆம்னி கார் சுந்தரம் ஓட்டி வந்த கார் மீது ேமாதியது.

இதில் சுந்தரம், பார்வதி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து சுந்தரம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியிலும், பார்வதி கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான ஆம்னி கார் டிரைவர் எடப்பாடியை சேர்ந்த மாதேஸ் ( 36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News